Announcement: Pray for 🇹🇷Turkey 🔹 Follow us in social media and get daily verse 🔹 We are officially now in sharechat. Get your daily bread by follow us. 🔹 இன்றைய சிந்தனை வெளியிடப்பட்டுள்ளது

Thursday, August 25, 2022

வீட்டுக்கு மனைவி அலங்காரம்

பிதாவாகிய தேவன் தாமே நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருவாராக. 

டேய் ஆபிரகாம் என்றோ,

பெயரைச் சொல்லி கூப்பிட்டோ அல்லாமல்,  

சாராள் தன் *கணவன் ஆபிரகாமை “ஆண்டவர்*” என்று அழைத்து கீழ்படிந்து இருந்தார். (1 பேதுரு 3:6)  

சமுதாயத்தில், தன் புருஷனுக்கு மேன்மையை கொடுக்கும் கிரீடமாக மனைவி இருக்கிறார் (நீதி. 12:4)

இதை மறந்து, எந்நேரமும் மனைவியானவள்; 

புருஷனை நச்சரித்துக்கொண்டே, முணுமுணுத்துக் கொண்டே, உங்களுக்கு என்ன தெரியும் சும்மா இருங்கள் என்றால்; கணவனுக்கு கிரீடமாக அல்ல அவன் தலைக்கு பாரமாக தோன்றும்.


எதற்கெடுத்தாலும் நொச்சு நொச்சுனு இருந்தால், வீட்டின் நடுவிலிருந்து  கணவன் ஆளுமை செய்யாமல் தன் வேலை உண்டு தான் உண்டு என்று அவன் போக்கில் இருந்து விடுவான் (நீதி. 25:24).


மனைவியானவள் தன் வீட்டை கட்ட வேண்டும் (நீதி. 14:1) அப்போது அவள் தன் வீட்டுக்கு *அலாரமாக இல்லாமல் அலங்காரமாய் இருப்பாள்*. (நீதி. 31:10) 

தன் சொந்த புருஷனுக்கு மனைவி அடங்கியிருக்க வேண்டும் (எபே. 5:22).

*அப்பொழுது அந்த வீடு சந்தோஷத்திலும் சமாதானத்திலும் திளைத்திருக்கும்*. 

Praise the Lord 🙏

-Jesuswithustn 

No comments:

Post a Comment